
பிளாஷ்பேக் : மும்மொழி நாயகியான முதல் நாயகி
வில்லன் ஒரு குடும்பத்தை அழிப்பான். அந்த குடும்பத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் திசைக்கு ஒருவராக தூக்கி வீசப்படுவர்கள். அவர்கள் வளர்ந்து வாலிபனான பிறகு இருவரும் இணைந்து வில்லனை பழிவாங்கும் கதை. இதே கதை பின்னாளில் ஏகப்பட்ட படங்களாக வந்தது.
இந்த படத்தில் எம்.கே.ராதாவும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். ஆர்.நாகேந்திர ராவ் வில்லனாக நடித்தார். இவர்கள் தவிர எல்.நாராயண ராவ், ஜி.பட்டு ஐயர், லட்சுமிபிரபா, சூர்யபிரபா மற்றும் "ஸ்டண்ட்" சோமு ஆகியோர் நடித்தனர். வழக்கறிஞராக இருந்த டி.ஜி.ராகவாச்சாரி (ஆச்சார்யா) இயக்கினார்.
படம் பெரிய வெற்றி பெற்றது. அதனால் தெலுங்கில் "அபூர்வா சகோதரலு" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதிலும் எம்.கே.ராதா, பானுமதி நடித்தனர். இதே படம் ஹிந்தியில் "நிஷான்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ரஞ்சன் ஹீரோவாக நடித்தார். பானுமதி ஹீரோயினாக நடித்தார். மூன்று மொழிகளிலுமே படம் சூப்பர் ஹிட்டானது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!