
இன்று நன்றி சந்திப்பு நடத்தும் ரெட்ரோ குழு
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று இரவு சென்னையில் பத்திரிகையாளர்களை "ரெட்ரோ" படக்குழு சந்திக்க உள்ளது. ஆனால், நிகழ்ச்சி அரங்கிற்குள் கேமராவிற்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் முன்பு நன்றி தெரிவித்து பேசும் நிகழ்வும் நடக்க வாய்ப்பில்லை என்று விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. ஒரு "கெட் டு கெதர்" போல நன்றி தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி பதில் என்று நிகழ்த்தினால் தேவையற்ற கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு என நினைக்கிறார்களாம். இப்படத்திற்கான நெகட்டிவிட்டியை வேண்டுமென்றே சிலர் பரப்புகிறார்கள் என்றும் படக்குழு வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. மற்ற மொழிகளில் கூட சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் பற்றியும் இப்படத்தின் தொடர்பாக நெகட்டிவ் செய்திகளை வெளியிட சில போட்டி நடிகர்கள், நடிகைகளின் ஆதரவுடன் சிலர் செய்வதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!