
அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ்
அதேசயம் மீண்டும் மிஸ் மேகி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வைரலாகி வருகிறது. அதற்கேற்றார் போல் ஜாய் கிரிஸில்டாவும் தன் இன்ஸ்டாகிராமில் ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டும், காதலர் தினத்தை அவருடன் கொண்டாடியதாக அறிவித்தும் போஸ்ட் போட்டிருந்தார்.
இந்த சர்ச்சைகள் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் முதன் முறையாக விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், "என்னை பற்றி சோஷியல் மீடியாவில் பரவி வரும் செய்திகள் பற்றி எனக்கு தெரியும். என் வாழ்க்கை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. சில விஷயங்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. என்னுடய குடும்பத்தில் எந்த பிரச்னையும் கிடையாது. அவசியம் ஏற்பட்டால் அதுகுறித்து விளக்கமாக சொல்வேன். என்னுடைய மிகவும் பர்சனாலான வாழ்க்கை குறித்து நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை" என அதில் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!