
இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத்
கடந்த 2022-ல் ரினில் ராஜ் என்பவரை தான் காதலிப்பதாக அறிவித்த அபர்ணா வினோத் அப்போது, “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ, அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது” என்று காதலர் ரினில் ராஜ் பற்றி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இரண்டு வருடங்களுக்குள் அந்த காதல் திருமணம் முடிவுக்கு வந்து அவர் இப்படி விவாகரத்தை நோக்கி நகர்ந்துள்ளது நிஜமாகவே ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
இது குறித்து அபர்ணா வினோத் கூறும்போது, “தீவிரமான யோசனைக்கு பிறகு தான் என்னுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளேன். இது ஒன்றும் அவ்வளவு ஈஸியான முடிவு அல்ல என்றாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். என்னுடைய திருமணம் உணர்ச்சிகரமாக முடிவெடுக்கப்பட்டு கடினமான சோதனைகளை கடந்து வந்துள்ளது. இதை இப்போதே முடிவுக்கு கொண்டு வந்து என்னுடைய முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!