
தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன்
அந்த வகையில் சமீபத்தில் தனது வீட்டின் பால்கனியில் நின்று எதிர் வீட்டுக்காரர் ஒருவரை அநாகரிக வார்த்தைகளால் வசை பாடியதுடன், தான் அணிந்திருந்த வேட்டியையும் அவிழ்த்து காட்டி அநாகரிக செய்கையையும் செய்தார். இது பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களுளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல ரசிகர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும் அதிக அளவிலான ரசிகர்கள் விநாயகன் தனது இந்த போக்கை மாற்றிக் கொண்டு திரையுலக பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அக்கறை காட்டி கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் செய்த செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார் விநாயகன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “ஒரு சினிமா நடிகராகவும் ஒரு மனிதராகவும் எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் என்னால் சமாளிக்க முடியவில்லை.. என் பக்கம் இருந்து எதிர்மறையாக வெளிப்பட்ட தவறான விஷயங்களுக்காக பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!