
ஆஸ்கர் விருது நாமினேஷன் தேர்வில் கங்குவா
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்து தோல்வியைத் தழுவிய படம் "கங்குவா". சரித்திர காலமும், இந்தக் காலமும் கலந்த படமாக வெளிவந்தது. குறிப்பிடும்படியான மேக்கிங் படத்தில் இருந்தாலும் கதையும், திரைக்கதையும் மோசமாக இருந்ததால் இப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.
இருந்தாலும் 2025ல் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள இந்தப் படத்தை விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவிலிருந்து மலையாளப் படமான "தி கோட் லைப்", "கேர்ல்ஸ் வில் பி கேர்ல்ஸ்" ஆகிய படங்களும் இந்த நாமினேஷனில் பங்கு கொள்கின்றன.
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இந்தப் படங்கள் தேர்வாக அதிகப்படியான வாக்குகளைப் பெற வேண்டும். அவற்றிற்கான வாக்களிப்பு ஜனவரி 8ம் தேதி ஆரம்பமாகி 12ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் எந்தெந்த படங்கள் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது என்பதை ஜனவரி 17ம் தேதி அறிவிப்பார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!