
கை நடுங்கப் பேசிய விஷால் : அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
நேற்று இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் விழா அரங்கிற்குள் நுழைந்த போதே மிகவும் மெதுவாக நடந்து வந்தார். உடலும் மிகவும் இளைத்து காணப்பட்டார்.
நிகழ்ச்சியின் போது மேடை ஏறிப் பேசியபோது அவரது கை நடுங்கியபடியே இருந்தது. வார்த்தைகளும் தொடர்ச்சியாக வராமல், நிறுத்தி நிறுத்திப் பேசினார். அவரால் சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை. உடனடியாக உட்காருவதற்கு வசதி செய்து விஷால், விஜய் ஆண்டனி, சுந்தர் சி ஆகியோருடன் தொகுப்பாளர் கலந்துரையாடுவது போல நிகழ்ச்சியை மாற்றினார்.
விஷால் பேசியதை யு டியுபில் நேரடியாகப் பார்த்த ரசிகர்கள் பலரும் "விஷாலுக்கு என்ன ஆச்சு" என சமூக வலைத்தளங்களில் கேட்க ஆரம்பித்தனர். கடுமையான வைரஸ் காய்ச்சலுடன் அவர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்று தொகுப்பாளர் திவ்யதர்ஷினி விளக்கமளித்தார். இதனை டாக்டர்களும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஓய்வெடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சலுடன் அவரை இந்த விழாவுக்கு வரச் சொல்லி யார் கட்டாயப்படுத்தியது என்ற கேள்வியும் எழுந்தது. பல சிக்கல்களைக் கடந்து 12 வருடங்களுக்குப் பிறகு வரும் படம் என்பதால் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விஷால் தானாகவே வந்தார் என்று சொன்னார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!