
மகாநடி படத்தில் முதலில் நடிக்க மறுத்தது ஏன்? - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் தெலுங்கில் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவான மகாநடி படம் தான். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதலில் மகாநடி படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அது ஏன் என அவர் கூறியதாவது, ‛‛மகாநடி படத்தின் கதையை நாக் அஸ்வின் என்னிடம் கூறியபோது சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க பயந்து மறுத்துவிட்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நான் ஏன் நடிக்க மறுத்தேன் என கேட்டபோது, அந்த கதாபாத்திரத்தை என்னால் சரியாக திரையில் கொண்டுவர முடியுமா? இல்லையா? என்ற பயம் மற்றும் தயகத்தினால் அதை நிராகரித்தேன் என கூறினேன். பின்னர் அனைவரும் தந்த ஊக்கத்தினால் நடித்தேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!