
அல்லு அர்ஜுன் கைது மூலம் புஷ்பா 2 வசூலுக்கு உதவி செய்த முதல்வர் : ராம் கோபால் வர்மா கிண்டல்
நேற்று முன்தினம் அவர் இந்த வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைப்பதில் சற்று தாமதமானதால் ஒருநாள் இரவு முழுவதும் அவர் சிறையில் தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மறுநாள் காலை அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பல நட்சத்திரங்களும் சில அரசியல்வாதிகளும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் பின்னர் அவர் விடுதலை குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக இது போன்ற விஷயங்களில் கிண்டலுடன் கருத்துக்களை தெரிவிக்கும் சர்ச்சை புகழ் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த கைது குறித்து கூறும் போது, “ஏற்கனவே புஷ்பா-2 படம் வெற்றி படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படியும் கைது செய்தாலும் உடனே அவர் ஜாமீனில் வரப்போகிறார் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அப்புறம் எதற்காக இந்த கைது என்றால் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது வார கலெக்ஷனும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் நினைத்து விட்டார் போலும். எப்படியோ ஏற்கனவே பிரபலமாக இருந்த அல்லு அர்ஜுனை இந்த கைது நடவடிக்கை மூலம் இன்னும் மெகா பிரபலம் ஆகிவிட்டார். இரண்டாவது வார கலெக்ஷனுக்கும் வசதி செய்து கொடுத்துவிட்டார்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!