
நாகசைதன்யா 2வது திருமணம் : அலட்டிக் கொள்ளாமல் பார்ட்டி கொண்டாடிய சமந்தா
திருமண தினத்தன்று அவரது முன்னாள் மனைவி சமந்தாவின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்று தான் பலரும் எதிர்பார்த்தார்கள். அவரும் இவர்களைப் பற்றி குறிப்பிடாமல் அதே சமயம் மறைமுகமாக மணப்பெண் ஷோபிதாவுக்கு அறிவுரை சொல்லும் விதமாக “ஒரு பெண் போல சண்டை செய்” என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருந்தார். இதுவே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்போது அவர் தனது நட்பு வட்டாரங்களுடன் பார்ட்டி ஒன்றில் சமந்தா கலந்து கொண்ட வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமந்தாவே இந்த பார்ட்டியில் கலந்து கொண்டது குறித்து கூறும்போது, “மிகவும் அழகான ஒரு மாலை பொழுதாக அது இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணத்தை சமந்தா எந்த கவலையும் இன்றி அலட்சியமாகக் கடந்து செல்கிறார் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!