
விரைவில் வெளியாகும் ஹேமா கமிட்டியின் விடுபட்ட பக்கங்கள் : மீண்டும் புயல் கிளம்புமா ?
அதேசமயம் இப்படி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இடையே 16 பக்கங்கள் நீக்கப்பட்டு தான் வெளியானது. எதற்காக இந்த பக்கங்கள் நீக்கப்பட்டன என்பது குறித்து அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் பக்கங்களில் தான் யார் யார் இதுபோன்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார்கள் என விசாரணையின் போது வாக்குமூலம் கொடுத்த சம்பந்தப்பட்ட பெண்கள் கூறிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பர்சனல் காரணங்களுக்காக இதை நிறுத்தி வைப்பதாக அப்போது கேரள அரசு கூறியிருந்தது.
ஆனாலும் சில பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்தின் மூலமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமும் இந்த மறைக்கப்பட்ட பக்கங்களை வெளியிட வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அந்த 16 பக்கங்களை வெளியிடுவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பக்கங்கள் வெளியானால் இதில் அப்படி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட பிரபலங்களின் பெயர்களும் வெளிச்சத்திற்கு வரும் என்பதால் மீண்டும் மலையாள திரை உலகில் ஒரு புயல் வீசப்போவது மட்டும் உறுதி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!