
பகலில் புஷ்பா 2... இரவில் சிக்கந்தர் : ஓய்வில்லா ஓட்டத்தில் ராஷ்மிகா
இதில் தற்போது புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்புகள் சமீப நாட்களாக அருகருகே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் புஷ்பா 2 படப்பிடிப்பில் பகலில் கலந்து கொள்ளும் ராஷ்மிகா அப்படியே இரவில் சிக்கந்தர் படப்பிடிப்பிற்கு சென்று விடுகிறார். இப்படி இரவு பகல் என ஓய்வில்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிய விபத்து ஒன்று தனக்கு ஏற்பட்டதாக கூறிய ராஷ்மிகா பல நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் அனிமல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சல்மான்கான், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சிக்கந்தர் படம் ராஷ்மிகாவை பாலிவுட்டில் இன்னும் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என நம்பலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!