
நாகசைதன்யா - சோபிதா பற்றி அவதூறு ஜோதிடம் சொன்ன ஜோதிடரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
இவரது பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் மீது தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாயிலாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு வேணு சுவாமி இது குறித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் தன்னை மகளிர் உரிமை ஆணையத்தில் இருந்து விசாரிக்க அழைக்கக்கூடாது என நீதிமன்றத்தில் தடையும் பெற்றிருந்தார்.
தற்போது தெலுங்கானா உயர்நீதிமன்றம் இந்த தடையை விலக்கியுள்ளதுடன் மகளிர் உரிமை ஆணையத்திற்கு இது குறித்து விசாரணை நடத்த அனுமதியும் அளித்துள்ளது. இந்த விசாரணை குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமை ஆணையம் தற்போது வேணு சுவாமியை அழைத்து விசாரிக்க துவங்கியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!