
நடனம் ஆடுவதற்கு பயந்து காலை ஒடித்துக்கொள்ள நினைத்த ஜோதிர்மயி
இந்த படத்தில் இந்த முக்கிய கதாபாத்திரத்திற்காக வேறு எங்கும் ஒரு நடிகையை தேடாமல் தனது மனைவியையே நடிக்க வைக்க முடிவு செய்தாராம் அமல் நீரத். இந்த கதாபாத்திரத்திற்காக மொட்டை அடிக்க வேண்டும் என்றாலும் கூட அதுபற்றி கவலைப்படாமல் ஒப்புக்கொண்ட ஜோதிர்மயிக்கு படப்பிடிப்பில் நடனமாடும் காட்சிகளில் எப்படி சமாளிக்க போகிறோம் என்கிற பயம் வந்து விட்டதாம். நடனமாடி நீண்ட நாட்களாகி விட்டதாலும் சரியான உடற்பயிற்சி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதாலும் நடனம் ஆடுவதில் ஒரு தயக்கம் ஏற்பட்டதாம். அதற்கு பதிலாக எப்படியாவது கீழே விழுந்து காலை முறித்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு கூட எனக்கு யோசனை வந்தது என்று கூறியுள்ளார் ஜோதிர்மயி. இருந்தாலும் நடன இயக்குனர் கொடுத்த பயிற்சி மூலம் ஓரளவு சமாளித்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!