
மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர்
இப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வெளியில் இருந்து எந்த உதவியையும் தேட வேண்டாம் நமக்குள்ளேயே அது இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சு வாரியர். இதுபற்றி அவர் கூறும்போது, “சந்தோஷத்தை எதிலும் தேட வேண்டாம். ஏதோ சில விஷயங்களை கேட்கும்போதும் பார்க்கும்போதும் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். நீங்களாகவே உங்களுக்குள் சந்தோஷத்தை கொண்டு வர முடியும். சந்தோஷத்தை உணர்வதற்காக வெளியில் இருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம். அது தேவையானதும் அல்ல. நான் தனியாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் கூட நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். அது சரியா தவறா என்பது எனக்கு தெரியாது. நான் விரும்பும் வரை எந்த வேலையும் செய்யாமல் என்னால் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!