
வாடிவாசல் : எந்த பிரச்னையும் இல்லை என்கிறார் தாணு
அவர் கூறுகையில், “கடந்த மாதம் நானும், வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து வாடிவாசல் படத்தின் பணிகளை குறித்து பேசினோம். தற்போது இப்படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளோம். இதற்காக மதுரையில் அலுவலகம் அமைந்துள்ளோம். 3 நாட்கள் படப்பிடிப்பு எடுத்து இதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தோம். இதையடுத்து லண்டனில் உள்ள ஜூராசிக் பார்க் படத்தை எடுக்க உறுதுணையாக இருந்த கலைஞர் ஒருவரிடம் பேசியுள்ளோம். அதற்காக தான் காலதாமதம் ஆகி வருகிறது. வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!