
விக்ரம் நடித்த கந்தசாமி, தில் கலந்த கதையா சூர்யாஸ் சாட்டர்டே ?
அவர் தற்போது தெலுங்கில் நடித்துள்ள "சரிபொத சனிவாரம்" படம் தமிழில் "சூர்யாஸ் சாட்டர்டே" என்ற பெயரில் டப்பிங் ஆகி ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்துள்ள நானி, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஜே சூர்யா, படத்தின் கதை என்ன என்பதை சுருக்கமாகச் சொன்னார். அவர் சொன்ன கதை, டிரைலர் ஆகியவற்றைப் பார்த்த பின்பு அப்படம் விக்ரம் நடித்து வெளிவந்த "தில், கந்தசாமி" ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் எனத் தெரிகிறது. மக்களின் பிரச்சனைகளை அறிந்து "சேவல்" முகமூடியுடன் போய் அவற்றை விக்ரம் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் ‛கந்தசாமி" படத்தின் கதை. "தில்" படத்தில் இன்ஸ்பெக்டரான ஆசிஷ் வித்யார்த்தியை போலீஸ் வேலைக்குத் தேர்வான விக்ரம் எதிர்ப்பதுதான் கதை. இரண்டு கதைகளையும் கலந்து, கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது. படம் வெளிவந்த பின் எது உண்மை என்பது தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!