
ஆக்ரோஷமான தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா : இலங்கையில் படப்பிடிப்பு
இந்த நிலையில் படத்தில் விஜய்தேவரகொண்டாவின் ஆக்ரோஷமான தோற்றத்தை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், படம் அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி வெளியிடப்படும் என்பதையும் அறிவித்துள்ளது. கிரிஷ் கங்காதரன் - ஜோமோன் டி.ஜான் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதுவரை 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. தற்போது இலங்கையில் உள்ள அடர்ந்த மலை பகுதியில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தெலுங்கில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!