
சுசீந்திரன் படத்தில் 3வது முறையாக இணைந்த மீனாட்சி
இதன் படப்பிடிப்பை இயக்குனர் பாண்டிராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் படம் குறித்து சுசீந்திரன் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் இயக்கும் இளைஞர்களை பற்றிய கதை. 2கே தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக உருவாகிறது. வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் ஒரு இளைஞர் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் நடத்துகிறோம் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!