
சென்னையில் வரலட்சுமியின் திருமண வரவேற்பு
சமீபத்தில் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு தன் குடும்பத்தாருடன் சென்று திருமண அழைப்பிதழ் தந்தார் வரலட்சுமி. அடுத்து ஐதராபாத் சென்று அங்குள்ள பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.
ஜூலை 2ம் தேதி வரலட்சுமி, நிக்கோலய் திருமணம் தாய்லந்து நாட்டில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்களாம். அதற்கடுத்து ஜூலை 3ம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.
திருமணத்திற்குப் பிறகும் வரலட்சுமி சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!