
இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவரானார் சபேசன் : தினா தோல்வி
மேலும் செயலாளராக முரளி, பொருளாளராக சந்திரசேகர், துணை தலைவராக மூர்த்தி மற்றும் இணை செயலாளராக பத்மஸ்ரீ பாலேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்த தினா மூன்றாவது முறையாகவும் போட்டியிட்டார். இவர் மீது முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இசையமைப்பாளர் இளையராஜாவே நேரடியாக தினாவை போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் இதுபற்றிய விளக்கத்தை இளையராஜாவிடம் தெரிவித்துவிட்டேன் என்றார் தினா. தினாவிற்கு கங்கை அமரன், மனோ உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!