
மீண்டும் இணையும் பார்த்திபன் - வடிவேலு கூட்டணி
பார்த்திபன் மூலம் வடிவேலுக்கு உருவாகும் சிக்கல்கள் தான் இவர்களது காமெடியின் அடிநாதம். இதைத்தொடர்ந்து வந்த வெற்றி கொடி கட்டு, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களில் இவர்களது காமெடி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் ஒரு காலகட்டத்தில் வடிவேலு சோலோ காமெடியனாகவும் கதாநாயகனாகவும் வளர்ந்தார். அதன் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் மீண்டும் தங்களது கூட்டணி இணைவதற்கான வாய்ப்பு விரைவில் இருக்கலாம் என்று சூசகமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், அங்கே வடிவேலுவுடன் இணைந்த எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ,"நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்! இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்.." என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!