
நிதி நிறுவன மோசடி வழக்கு : 12ம் தேதி போலீசில் ஆஜராக ஆர்.கே.சுரேசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இந்த மோசடி வழக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை, சினிமா தயாரிப்பது தொடர்பாகத்தான் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களோடு வரவு செலவு வைத்துக் கொண்டதாக ஆர்.கே.சுரேஷ் மறுப்பு தெரிவித்திருந்தார். அதோடு தன் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 10ம்தேதி அவர் நாடு திரும்புவதாக கூறப்பட்டு இருந்தது. ஆர்.கே.சுரேஷ் 12 கோடி மோசடி செய்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், அவரை கைது செய்யாவிட்டால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12ம்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆர்.கே.சுரேசை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதியை போலீசார் பெற வேண்டும். என்று உத்தரவிட்டு வழக்கை வருகிற 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!