
லியோ நடன கலைஞர்களுக்கு சம்பள பாக்கியா? பெப்சி விளக்கம்
பின்னர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் “சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் "லியோ" படத்தில் இடம்பெறும் "நான் ரெடி தான் வரவா..." பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடனமாட 7 நாட்களுக்கு 22 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் தற்போது எங்களுக்கு சம்பளமாக தலா 7 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளனர். வேலை முடிந்ததும் உரிய சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள்" என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ""லியோ படத்தின் பாடல் காட்சிக்கு 2 ஆயிரத்துக்கு மேற்றபட்ட நடன கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் நடன கலைஞர்கள் சங்கத்தில் ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்கள். அதிலும் 400 கலைஞர்கள் வெவ்வேறு படங்களில் பணியாற்றினார்கள். இதனால் சங்க உறுப்பினர்கள் 600 பேர் தவிர மீதம் தேவைப்படுவோருக்கு உறுப்பினர் அல்லாத நடன கலைஞர்கள் பாடல் காட்சியில் பயன்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 1750 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 10,500 ரூபாய் சம்பளம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது"" என்று தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!