
இறுதிகட்டத்தில் குண்டான் சட்டி
இந்தக் கதையை 6 நாட்களில் எழுதினேன். 8 மாதத்தில் படத்தை உருவாக்கினேன். சினிமா மாதிரியே பாடல், சண்டை எல்லாம் இருக்கும். கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும், வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எப்படி படித்து முன்னேற வேண்டும் என்று இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கேன்.
குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் இருவரும் சகோதர்கள். அவர்களின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் கேலிக்கு உள்ளாகிறார்கள். இதனால் தங்களது வித்தியாசமான தோற்றத்தை கொண்டே எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் மாட்டிக் கொள்ள அவர்கள் தங்கள் புத்திசாலிதனத்தால் தப்பித்தார்களா என்பதுதான் கதை. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!