
டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து
கடந்த மாதம் சென்னையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றார். அப்போது சாகசம் செய்ய முயன்றபோது விபத்து நடந்தது. இதில் அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மோட்டார் சைக்கிளை வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதாக டி.டி.எப். வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவரை கடந்த செப்டம்பர் 19ந்தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு முறையிட்டு வருகிறார் வாசன். சென்னை, ஐகோர்ட்டில் இந்த வழக்கு வந்தபோது, ""மனுதாரரின் யு-டியூப் சேனலை மூடிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளை எரித்து விடலாம்” என்று நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்தார். அதோடு அவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையே இவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் இப்போது அவரின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!