
மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல்
இந்த நிலையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாக பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு இருப்பதால், மீண்டும் வாடிவாசல் படம் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக கங்குவா படத்தை முடித்ததும் ஏற்கனவே தன்னை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டு இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தற்போது சூரரைபோற்று படத்தை ஹிந்தியில் அக்சய் குமாரை வைத்து ரீமேக் செய்து வரும் சுதா, அப்படத்தை முடித்ததும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!