
24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ்
இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ராதாரவி, சந்தானபாரதி, திருக் குமரன் அஜய் , ஆஷிகா யாஷ், மானஸ்வி , ஷிவானி ஹரிகுமார், ஆகியோர் நடிக்கின்றனர். படம் பற்றி பாரதி கணேஷ் கூறியதாவது: இன்றைய 5ஜி ஜெனரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல் செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான கருத்தினை விளக்கும் ஒரு பதிவாக சென்னை சிட்டியில் நடக்கும் ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்தப்படம் தயாராகி வருகிறது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!