
பார்க்கிங் தகராறு : டிம்பிள் ஹயாதி மீது வழக்கு பதிவு
ஐதராபாத் காவல் துறையில் டிராபிக் பிரிவில் உதவி கமிஷனராக பணி புரிபவர் ராகுல் ஹெக்டே. அவரது அலுவலக வாகனத்தை அவருக்குரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளார். பார்க்கிங் ஏரியாவிற்கு வரும் போதெல்லாம் போலீஸ் வாகனத்தை டிம்பிள் எட்டி உதைத்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம். பத்து நாட்களுக்கு முன்பு தன்னுடைய காரை டிம்பிள் எடுக்கும் போது போலீஸ் வாகனத்திற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், போலீஸ் வாகன டிரைவருடன் டிம்பிள் அடிக்கடி சண்டைக்குச் செல்வாராம். அதனால் டிரைவர் சேத்தன் குமார் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் டிம்பிள் மீது புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு வாகனத்தை வேண்டுமென்றே இடித்ததற்காகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் டிம்பிள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் டிம்பிள் அவரது வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, “அதிகாரத்தைப் பயன்படுத்துவது எந்தத் தவறையும் நிறுத்தாது,” என பதிவிட்டுள்ளார் டிம்பிள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!