
தங்கலான் படப்பிடிப்பில் தினமும் ரத்தம் சிந்தும் விக்ரம்
இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் "தங்கலான்" படத்திற்காக தலைமுடி, தாடி வளர்த்து தன்னுடைய தோற்றத்தை ஒல்லியாக்கி வேறு ஒரு தோற்றத்தில் இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விலா எலும்பில் காயமேற்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில நாட்கள் ஆகும் என்று சொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது ஓய்வில் இருப்பார் என்று சொல்கிறார்கள்.
"தங்கலான்" படத்தின் கதை அந்தக் காலக் கதையாக உருவாகி வருகிறது. கேஜிஎப் உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நடிக்கும் போது தினமும் விக்ரமிற்கு ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு நடித்து வருகிறாராம். ரத்தம் சிந்தி உழைப்பார்கள் என்று சொல்வார்கள், ஆனால், "தங்கலான்" படப்பிடிப்பில் குழுவினரும், விக்ரமும் உண்மையிலேயே அப்படித்தான் உழைத்து வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படமாக "தங்கலான்" படம் இருக்கும் என்பது கோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவல்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!