
மீண்டும் பெரிய திரைக்கு திரும்பிய சாந்தினி தமிழரசன்
படம் பற்றி இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது: வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குடும்பபாங்கான படமாக இந்த குடிமகான் உருவாகியுள்ளது. குடியை பற்றிய படம் என்றாலும் அதை தப்பாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையையும் குடிமகன் என்று சொல்வார்கள், குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், குடிமகானாக இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது. என்கிறார்.
சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். சிறுமுதலீட்டு படங்களின் ஆஸ்தான நாயகியாக இருந்த அவர் பிறகு சின்னத்திரைக்கு சென்றார். அங்கு தாழம்பூ, இரட்டை ரோஜா தொடர்களில் நடித்தார். தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பி இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!