
2024 சங்கராந்திக்கு தள்ளிப் போகும் ஷங்கரின் ஆர்சி 15
இதன் காரணமாக தற்போது இந்தியன்-2, ராம்சரண் -15 ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வருகிறார் ஷங்கர். இதனால் வேகமாக நடைபெற்று வந்த ஆர்சி -15 படப்பிடிப்பு தற்போது தாமதமாகி வருகிறது. அதோடு ஆர் சி 15 படத்தில் விஷுவல் எபக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் செய்முறை பல மாதங்கள் நீடிக்க என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் முடிவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால் தற்போது அப்படத்தை 2024 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு முடிவு செய்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர் சி -15 படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், ஒரு முக்கிய வேடத்தில் அஞ்சலியும் நடித்து வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!