
வாரிசு படத்தில் நடித்தது ஏன்? : ராஷ்மிகா சொன்ன விளக்கம்
இந்த நிலையில் அதுகுறித்து அவர் கூறுகையில், வாரிசு படத்தின் கதையைக் கேட்டபோது இரண்டு பாடல்களை தவிர பெரிதாக எனக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்பது தெரியும். அது தெரிந்தும் நான் அந்த படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் விஜய் தான். அவரை நீண்ட காலமாக ஒரு ரசிகையாக நான் ரசித்து வந்திருக்கிறேன். அதனால் அவருடன் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்து வந்தது. அதன் காரணமாகவே வாரிசு படத்தை விடுவதற்கு எனக்கு மனசு வரவில்லை. எப்படியாவது விஜய்க்கு ஜோடியாக நடித்து விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் வாரிசு படத்தை ஏற்றுக் கொண்டேன். அதோடு நான் ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அந்த ஹீரோக்களிடம் இருந்து ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அந்த அடிப்படையில்தான் வாரிசு படத்தில் நான் நடித்தேன். எனக்கு கூடுதல் முக்கியத்துவம் இல்லை என்றாலும் விஜய்யுடன் நடித்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா .



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!