
இறைவன் ஆக்ஷன் திரில்லர் படம்: தயாரிப்பாளர் தகவல்
இதுகுறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது: ஜெயம்ரவி, நயன்தாராவுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார். படம் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம்.
இயக்குநர் அஹமதுவின் முந்தைய படங்களான வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், ஜனகனமன ஆகிய படங்களைப் போலவே இறைவன் படமும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும். ஆக்ஷன் திரில்லர் கதையாக இது இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இறைவன் படம் எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன். என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!