
வாரிசு படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகள் பங்கேற்பு: பத்திரிகையாளர்கள் மீது தாகுதல்
இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை கைது செய்தனர். அதில் சிலர் தற்போது தலைமைறவாக உள்ளனர்.
படப்பிடிப்பை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்தனர் அதை நாங்கள் தடுத்தோம். அவர்கள் எங்களை தாக்கினார்கள் என்று விஜய் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள். டிரோன் கேமரா பயன்படுத்தவில்லை. படப்பிடிப்பில் அனுமதி இன்றி யானைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை உறுதி செய்யவே சென்றோம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பதிவு செய்யவில்லை என்று சேனல் தரப்பு கூறியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!