
ரிக்கார்டிங் ஸ்டூடியோ தொடங்கினார் சைந்தவி
இதன் திறப்பு விழா நடந்தது. தயாரிப்பாளர் எஸ்.தானு, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், ஹரி சரண், தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக்குநர் ஏ.எல்.விஜய், ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பிரியங்கா, ஆதித்யா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஸ்டூடியோ குறித்து சைந்தவி கூறியதாவது: இந்த ரெகார்டிங் ஸ்டுடியோவைத் துவக்க வேண்டும் என்பது எனது சில ஆண்டுகால கனவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்க முயன்றபோது, ஒரு பொல்லாத பூனையைப்போல் கொரோனா குறுக்கே வந்துவிட்டது. இறுதியில், ஒருவழியாக அந்தக் கனவு இன்று நிஜத்திற்குள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி. என்கிறார் சைந்தவி.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!