
பாலா அலுவலகம் முன் தர்ணா செய்த பிதாமகன் தயாரிப்பாளர்
ஆனால் பாலா படம் இயக்கி கொடுக்கவில்லை. முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. பல முறை திருப்பி கேட்டும் பாலா அதற்கு செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பெரும் பொருளாதார சிக்கலில் இருக்கும் வி.ஏ.துரை பழங்குடி என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
அவர் நேற்று பாலாவின் அலுவலகத்திற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பாலாவின் உதவியாளர்கள், அவரை அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வி.ஏ.துரை, பாலா அலுவலக வாசலில் நின்று தர்ணா செய்துள்ளார். போலீஸ் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் துரையுடன் தொடர்பு கொண்டு பேசி தர்ணாவை கைவிடுங்கள், பாலாவுடன் பேசி இதற்கொரு தீர்வு காணலாம் என்று கூறியதை தொடர்ந்து துரை அங்கிருந்து சென்றுள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசில் இரு தரப்பும் புகார் அளிக்கவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!