
பரோல் படத்தில் அண்ணன், தம்பி மோதல்
படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறியதாவது: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்லமுடியாத ஒரு கதைதான் இது. தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத, கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும் அவன் அண்ணனுக்கும் உள்ள பிரச்சனையும், அதைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம்.
இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை ஆனால் வலுவான ஆக்சனும் பரப்பான திரைக்கதையும் உள்ளது. மிக அழுத்தமான ஒரு ஆக்சன் படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும் . தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும். என்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!