
சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு இரண்டாம் பாகம் ஆரம்பமா?
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2011ம் ஆண்டில் அவரது கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்க "த டர்ட்டி பிக்சர்" என்ற படம் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதும் கிடைத்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான கதை எழுதும் வேலைகளை கனிகா தில்லான் தற்போது செய்து வருகிறாராம். சில்க்ஸ் ஸ்மிதாவின் இளமைக் கால வாழ்க்கை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் எனத் தெரிகிறது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் வித்யா பாலனே நடிப்பாரா அல்லது வேறு நடிகை நடிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!