
பட்டதெல்லாம் போதும், இனி படம் தயாரிக்க மாட்டேன்: அமலாபால் வேதனை
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் அமலாபால் பேசியதாவது: அபிலாஷ் பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ். பணிக்கரும் என்னை சந்தித்து "கடாவர்" படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன். நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம்.
படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது. இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் தற்போது முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இவ்வாறு அமலாபால் கூறினார்.
பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமலாபால் "ராட்சசன் படத்திற்கு பிறகு எனக்கு த்ரில்லர் படங்களே அதிகமாக வந்தது. ஆனால் நான் காதல் கதைகளில் நடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன். இனி படங்கள் தயாரிக்க மாட்டேன். கடாவர் படம் எனக்கு பல கசப்பான அனுபவங்களை தந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள். நான் இப்போது என்னையும், என் சினிமாவையும் மட்டுமே காதலிக்கிறேன்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!