
இயக்குநர் ஷங்கர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்
பண விவகாரம் தொடர்பாக 3 மணி நேரம் இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுது. ஆனால், அது என்ன வழக்கு என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற மறுத்து விசாரணைக்கு பின்னர் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள் .
இதற்கிடையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரான தகவல் அறிந்து பல ஊடகத்தினர் அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். ஷங்கர் தனது காரில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஊடகத்தினர் குழுமியிருந்ததை அறிந்து கொண்ட இயக்குநர் ஷங்கர் விசாரணை முடிந்த பிறகு ஊடகத்தினரின் கண்ணில் படாமல் பின்வாயில் வழியாக வாடகை காரில் சென்றுள்ளார் .
இந்நிலையில் வழக்கு தொடர்பாக இயக்குநர் சங்கரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!