
ராஜமவுலியின் அடுத்த படம் பட்ஜெட் ரூ.800 கோடியா
ஏப் 01, 2022
Advertisement
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய ராஜமவுலி அதையடுத்து ராம்சரன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வெளியிட்டார். கடந்த 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைக்கு வந்த முதல் நாளில் 230 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தற்போது வரை 700 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்த ராஜமவுலி தற்போது அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்தப் படத்தை ரூபாய் 800 கோடி பட்ஜெட்டில் இயக்கப்போகிறாராம். பெரும்பாலான படப்பிடிப்பை ஆப்பிரிக்கா காடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இந்த படம் அவரது பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களை விடவும் பிரமாண்டமான பான் இந்தியா படமாக உருவாகிறதாம்.
இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்த ராஜமவுலி தற்போது அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்தப் படத்தை ரூபாய் 800 கோடி பட்ஜெட்டில் இயக்கப்போகிறாராம். பெரும்பாலான படப்பிடிப்பை ஆப்பிரிக்கா காடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இந்த படம் அவரது பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களை விடவும் பிரமாண்டமான பான் இந்தியா படமாக உருவாகிறதாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!