
தடை நீங்கியது: நாளை ஓடிடியில் வெளியாகிறது வலிமை
இதற்கிடையில் வலிமை படம் தியேட்டர்களில் ஓடி முடித்த பிறகு வலிமை படத்தின் கதை 2016 ஆம் ஆண்டு வெளியான தனது மெட்ரோ படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூறி, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். மேலும் படத்தை ஓடிடியில் வெளியிடவும் தடைகோரி கூடுதல் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு போதுமான முகாந்திரம் இல்லை என்று கூறி வலிமை படத்தை, ஓடிடியில் வெளியிட எந்த தடையும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் நாளை (மார்ச் 25) வலிமை படம் ஓடிடியில் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!