
ஆபாச மிரட்டல் : பெண் இயக்குனர் கண்ணீர்
இதுகுறித்து சந்திரா தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தேன். அதை புரிந்து கொள்ளாமல் ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய தொலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார்.
அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறார்.கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாததை.
நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஜாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார் சந்திரா தங்கராஜ். பேட்டியின் போது தயாரிப்பாளர் மதியழகன் உடன் இருந்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!