
சொந்த மாநிலத்தில் அனுமதியில்லையா : ராம்கோபால் வர்மா கேள்வி
ஆந்திர அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமா தியேட்டர் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்தது. திரையுலகினரின் வேண்டுகோளுக்கும் அது செவி சாய்க்கவில்லை. இதனால், பெரிய பட்ஜெட் படங்கள் வசூலைக் குவிக்க பெரும் தடுமாற்றமாக உள்ளது.
இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா, ஆந்திர சினிமாட்டோகிராபி அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையாவைச் சந்தித்துப் பேசினார். பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்த வர்மா டிக்கெட் பிரச்சினை குறித்த ஆந்திர அரசின் நிலை குறித்து விமர்சித்துப் பேசினார்.
இன்று சமூகவலைதளத்தில் “வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை 2200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் "ஆர்ஆர்ஆர்" படத்திற்கான டிக்கெட் விலை 2200க்கு விற்க அம்மாநில அரசு அனுமதி அளிக்கும் போது, சொந்த மாநிலமான ஆந்திராவில் 200 ரூபாய்க்குக் கூட விற்க அனுமதியில்லையா ?. "கட்டப்பாவை யார் கொன்றது என்ற பரிதாபமான கேள்வியைக் கேட்க வைக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!