
யாஷிகா ஆனந்தின் கிறிஸ்துமஸ் போட்டோஷூட்
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா குணமாகி வருகிறார். தேறி வரும் யாஷிகா அடிக்கடி தன்னுடைய உடல் நிலை குறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு பின் முதன் முறையாக எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு 95 நாட்களுக்கு முன் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.
உடல் நிலை குணமான நிலையில் யாஷிகா சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது பூரண குணமடைந்துள்ள யாஷிகா, பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது முன்னாள் காதலரான நிரூப்புக்கு சில அறிவுரைகளை கூறிவிட்டு வந்தார். இந்நிலையில் முன்புபோல் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!