
யாஷிகாவிடம் போலீசார் விசாரணை : ஓட்டுனர் உரிமம் பறிமுதல்
இதனிடையே சிகிச்சையில் உள்ள யாஷிகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் காரை தான் ஓட்டி வந்ததாக கூறியுள்ள யாஷிகா, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. என் தோழி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார் என்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனராம்.
மேலும், இந்த கார் விபத்தில் யாஷிகா ஆனந்தின் வலது கால் எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து யாஷிகாவின் சினிமா தோழியான நடிகை ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா நலமுடன் இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பவர், அவர் விரைவில் பூரண குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!