
வரலட்சுமி திருமணம் : பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் தந்த சரத்குமார்
ஜூன் 29, 2024
Advertisement
நடிகை வரலட்சுமிக்கும், மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் அவர்கள் திருமணம் நடைபெறும் நிலையில், அதையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி என அனைவரும் பல பிரபலங்களையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று டில்லியில் பிரதமர் மோடியையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி உள்ளார்கள். அப்போது பிரதமருடன் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சரத்குமார். இவை சோசியல் மீடியாவில் வைரலாகின. அதோடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் நேற்று டில்லியில் பிரதமர் மோடியையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி உள்ளார்கள். அப்போது பிரதமருடன் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சரத்குமார். இவை சோசியல் மீடியாவில் வைரலாகின. அதோடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!