
விஜய்சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். "உலகமகன்க் என்ற தனது கதையை திருடி உப்பெனா படம் எடுக்கபட்டிருப்பதாக அவர் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் நீதிபதியிடம், விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிமன்றம் விஜய்சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உப்பென்னா பட தயாரிப்பாளர், இயக்குனர் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!