
உடன்பிறப்பே - நவீன பாசமலர்
உடன்பிறப்பே பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: கத்துக்குட்டி படத்துக்கு பிறகு அடுத்த படம் கிடைக்கவில்லை. இந்த படத்தின் கதையோடு சில காலம் அலைந்தேன். கடைசியில் சூர்யா வீட்டு கதவு திறந்தது. சூர்யா சார் டீமில் அனைவருமே கதையை கேட்டுவிட்டு இது நவீன பாசமலர் என்றார்கள். நான் பத்திரிகையாளராக இருக்கும்போது ஜோதிகா எனக்கு அறிமுகம் என்பதால் அவரும் என்னை நம்பி படத்துக்குள் வந்தார். அவரின் 50வது படமாக இதில் நடிக்க முடிவெடுத்தார்.
முழுக்க முழுக்க தஞ்சாவூர் பெண்ணாக அவர் மாறி நடித்தார். பாசமும், கம்பீரமும் மிக்க பெண்ணாக படம் முழுக்க வலம் வருவார். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத தூய மனிதராக சசிகுமார் நடித்திருக்கிறார். இவர் மாதிரி வாழணும் என்று நினைக்க வைக்கிற மாதிரியான கேரக்டர் அவருடையது. வேல்ராஜின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்தை நல்லபடியாக உருவாக்க உதவியது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!